? (எஸ். பொ)
நூலகம் இருந்து
Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:46, 18 ஆகஸ்ட் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்
| ? | |
|---|---|
| | |
| நூலக எண் | 557 |
| ஆசிரியர் | எஸ். பொ. |
| நூல் வகை | நாவல் |
| மொழி | தமிழ் |
| வெளியீட்டாளர் | காந்தளகம் |
| வெளியீட்டாண்டு | 1994 |
| பக்கங்கள் | 84 |
வாசிக்க
- ? (எஸ். பொ) (2.51 MB) (PDF வடிவம்) -உதவி
நூல்விபரம்
பொன்னுத்துரை தன்னுடைய படைப்பாற்றலில் ஒரு பரிமாணத்தை மற்றதைக் காட்டிலும் கூடுதலாகவே சாதித்திருந்தார். அது அங்கதச்சுவை. அவருடைய ஒரு நூலின் அட்டை மீது வெறும் கேள்விக்குறி மட்டுமே இருக்கும். அட்டையைப் பிரித்தால் 80 பக்கங்க ளுக்கு உங்கள் சிந்தனையை ஒரு சூறாவளியில் பறக்க விட்டது போன்ற இலக்கிய அனுபவம். உண்மையில் அந்த 80 பக்கங்களை mind boggling என்று தான் கூறமுடியும். அங்கதச்சுவை என்பதை விட அங்கதனின் மகா சூரத் தந்தையான வாலிச்சுவை என்று தான் எனக்குத் தோன்றியது. -அசோகமித்திரன் (முன்னுரையில்)
பதிப்பு விபரம்
? (கேள்விக்குறி). எஸ்.பொன்னுத்துரை. சென்னை 600002: காந்தளகம், 834 அண்ணாசாலை, 2வது பதிப்பு, நவம்பர் 1994. 1வது பதிப்பு, ஒக்டோபர் 1972. (சென்னை 2: காந்தளகம்)
84 பக்கம். விலை: இந்திய ரூபா 25. அளவு: 17.5 * 12 சமீ.
-நூல் தேட்டம் (# 816)
