பகுப்பு:குரல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மட்டக்களப்பு, வந்தாறுமூலையினைக் களமாகக் கொண்டு 1999 ஆம் ஆண்டு தொடக்கம் காலாண்டு இதழாக இச்சஞ்சிகை வெளியாகியுள்ளது. இதுவொரு கலை இலக்கிய அறிவியல் சஞ்சிகையாகும். இதன் ஆசிரியர் குழுவில் அழகு கிருபா, சஞ்சீவி சிவகுமார், தில்லை சந்திரா ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதனை அம்பலத்தடி, வந்தாறுமூலையைச் சேர்ந்த அகம் இலக்கிய வட்டத்தினர் வெளியீடு செய்துள்ளனர். இவ்விதழானது மட்டக்களப்பு மாவட்டத்தின் அக்காலகட்ட கலை, கலாசார, சமூக, அறிவியல், கிராமிய மருத்துவம், அறிஞர்கள், போர்க்கால நடவடிக்கைகள் சார் விடயங்களினை விமர்சனக்கட்டுரைகள், சிறுகதைகள்,கவிதைகள், குறிப்புக்கள், நேர்காணல்கள் என்வற்றை உட்பொருளாகத் தாங்கி வெளிவந்துள்ளமை சிறப்பான விடயமாகும். எனினும் இவ்விதழ் நான்கு வெளியீடுகளுடன் இடைநிறுத்தப் பட்டமையும் குறிப்பிடத்தக்கதே.

"குரல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:குரல்&oldid=483570" இருந்து மீள்விக்கப்பட்டது