ஆளுமை:வேடப்பிள்ளை, வேலாயுதர் (மூத்ததம்பி, வேலாயுதர்)
நூலகம் இல் இருந்து
பெயர் | வேடப்பிள்ளை |
தந்தை | வேலாயுதர் |
பிறப்பு | 1836 |
இறப்பு | 1906 |
ஊர் | மட்டக்களப்பு |
வகை | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வேடப்பிள்ளை, வேலாயுதர் (1836 - 1906) மட்டக்களப்பு, கோட்டைமுனையைச் சேர்ந்த ஒரு கவிஞர். இவரது தந்தை வேலாயுதர். இவர் மூத்ததம்பி என்ற இயற்பெயரைக் கொண்டவர். இவர் நாட்டு வைத்தியக் கலையிலே புகழ் பெற்று விளங்கினார். இவர் வள்ளியம்மன் ஊஞ்சல், கண்டிராசன் ஊஞ்சல், கொத்துக் குளத்து மாரியம்மன் பதிகம், தாமரைக்கேணி மாரியம்மன் பதிகம், கோட்டைமுனை வைரவன் காவியம், ஆரப்பற்றை திருநீலகண்ட விநாயகர் பதிகம், விஷ்ணு பதிகம் ஆகிய பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3771 பக்கங்கள் 43
- நூலக எண்: 2469 பக்கங்கள் 329-330
- நூலக எண்: 963 பக்கங்கள் 206-207