ஆளுமை:விவியன், நமசிவாயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விவியன்
தந்தை நமசிவாயம்
பிறப்பு 1921.03.01
இறப்பு 1998.01.30
ஊர் காரைநகர்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விவியன், நமசிவாயம் (1921.03.01 - 1998.01.30) யாழ்ப்பாணம், காரைநகர், வலந்தலையைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரது தந்தை நமசிவாயம். இவர் பரியாரி ஞானப்பிரகாசத்தின் மைத்துனர் ஆவார். இவர் திருநெல்வேலி காவியப் பாடசாலையில் கல்வி கற்றுப் பின்னர் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.

இவர் ஊடகத் துறையில் ஆர்வம் கொண்டவராய் ஈழகேசரி நாளிதழில் துணை ஆசிரியராகவும் சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணி புரிந்தார். இவர் இந்தியாவில் மும்பாய், நாக்பூர் ஆகிய இடங்களில் ஆசிரியராகப் பணி புரிந்து பின்னர் நாடு திரும்பி நுவரேலியா புனித திரித்துவக் கல்லூரியின் ஆசிரியராக இணைந்தார்.

இவர் 1951 ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் உதவி எழுதுனராக சேவையில் அமர்ந்தார். அதன் பின்னர் நிகழ்ச்சி உதவியாளராகவும் நிகழ்ச்சி அமைப்பாளராகவும் பதவி வகித்தார். இவர் இலங்கை வானொலியில் பெயர் பொறித்த சாதனையாளராவார். 'பொங்கும் பூம்புனல்' நிகழ்ச்சியை உருவாக்கி அதற்குரிய இசையையும் ஆக்கிக் கொடுத்திருந்தார்.

இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அக்காலத்தில் பிரபலமாக இருந்த விவேகச் சக்கரம், விண்வெளி விநோதம், விவசாய நேயர் விருப்பம் போன்ற நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினார். இவர் 1977 இல் ஓய்வு பெற்ற பின்னும் "இளஞ்சுடர்" என்ற வாராந்த நிகழ்ச்சியை 1990 வரை நடத்தி வந்ததுடன் நாளிதழ்களில் அறிவியல் தொடர் கட்டுரைகள் பலவற்றை எழுதி வந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 349-350


வெளி இணைப்புக்கள்