ஆளுமை:யேசுராசா, அன்ரனி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யேசுராசா
தந்தை அன்ரனி
பிறப்பு 1948.07.15
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யேசுராசா, அன்ரனி (1948.07.15 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அன்ரனி. ரி.பாக்கியநாதன், ரி. யோசப் ஆகியோரிடம் நாடகம், நாட்டுக்கூத்து, இசை நாடகம் ஆகிய கலைகளைப் பயின்ற இவர், 1958 இலிருந்து இத்துறைகளில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் 13 இற்கும் மேற்பட்ட நாடகங்களிலும் 15 இற்கும் மேற்பட்ட கூத்துக்களிலும் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளதோடு, தேவசகாயம்பிள்ளை என்னும் நாட்டுக்கூத்தைச் சுருக்கி எழுதி மேடையேற்றியுள்ளார். இவர் தனது கலைகளைக் குருநகர், புதுக்குடியிருப்பு, செம்பியன்பற்று, கொழும்பு ஆகிய இடங்களில் நிகழ்த்தியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 213
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:யேசுராசா,_அன்ரனி&oldid=196668" இருந்து மீள்விக்கப்பட்டது