ஆளுமை:தில்லைநாதன், சாமித்தம்பி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தில்லைநாதன்
தந்தை சாமித்தம்பி
தாய் மாரிமுத்து
பிறப்பு 1948.07.24
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தில்லைநாதன், சாமித்தம்பி (1948.07.24 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சாமித்தம்பி; தாய் மாரிமுத்து. இவர் துறைநீலாவணை மகா வித்தியாலயத்திலும் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையிலும் ஆரம்பிக்கல்வியைப் பயி்ன்று தனது கலைமாணிப் பட்டத்தைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கல்வியியற் பட்டப்பின் டிப்ளோமாவை இலங்கைத் திறந்த பலக்லைக்கழகத்திலும் பெற்றார். மேலும் தனது கலாநிதிப் பட்டத்தைக் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவரே கலாநிதிப் பட்டத்தைக் கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் முதன்முறையாகப் பெற்றார்.

தனது ஆசிரியப் பயிற்சியை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பெற்ற இவர், ஆசிரியராக மட்டக்களப்பின் பல பாடசாலைகளிலும் மட்டக்களப்பு மண்டூர் மகா வித்தியாலயம், கொழும்பு விவேகானந்தா பாடசாலைகளில் முதலாந்தர அதிபராகவும் பணியாற்றினார். பின்னர் மட்டக்களப்பின் மண்முனை வடக்குப் பிரதேசக்கல்வி அலுவலகத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளராகவும் மண்முனை தென்மேற்குப் (பட்டிப்பளை) பிரதேச கல்விப்பணிப்பாளராகவும் போரதீவுப்பற்று கோட்டக்கல்வி அலுவலகத்தின் கோட்டக்கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.

இவர் சைவமும் நாமும், தமிழ் மொழி இலக்கியமும் இலக்கணமும், மண்டூர் முருகன் திருவிருத்தமாலை, தமிழ் மொழியில் இலக்கியச் சிறப்பு, தமிழ் மொழியில் இலக்கணச் சிறப்பு, மட்டக்களப்பில் இந்து சமய கலாச்சாரம், சைவசித்தாந்த எட்டு விரதங்கள், மட்டக்களப்புக் கோயில்களும் தமிழர் பண்பாடும், மட்டக்களப்புத் தமிழர் பண்பாட்டு மரபுகள் போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் வித்தியகலாபமணி விருது, 2008 ஆம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருது, இலக்கியமணி உட்படப் பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 56