ஆளுமை:தனலட்சுமி, மகாலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தனலட்சுமி, மகாலிங்கம்
தந்தை -
தாய் -
பிறப்பு 1940.07.06
இறப்பு -
ஊர் சுதுமலை
வகை எழுத்தாளர், ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தனலட்சுமி, மகாலிங்கம் (1940.07.06) யாழ்ப்பாணம், சுதுமலையை பிறப்பிடமாகவும் இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இணுவில் மத்திய கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றியுள்ள இவர் 1983ஆம் ஆண்டில் தனது கலைப்பணியை ஆரம்பித்தார். விலுப்பாட்டு, கவிதை, நாடகம், பட்டிமன்றம் என்பவற்றை மாணவர்களுக்கு பழக்குதலில் இவர் திறமை வாய்ந்தவராவார். தற்போதும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக பாலபண்டிதர் வகுப்புக்களையும், வெளிவாரி மாணவர்களுக்கான கலைமானிப்படிப்புக்காக இலவசமாக தமிழ்பாடத்தினையும் கற்பித்து வருகின்றார். மேலும் சுதுமலை ஈஞ்சடி வைரவர் மீதும், சங்குவேலி சித்திரவேலாயுத சுவாமி மீதும், கிளிநொச்சி கனகபுரம் நாகபூஷணி அம்மன் மீதும் திருவூஞ்சல்களைப் பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 64150 பக்கங்கள் 15