ஆளுமை:ஞானசூரியர், சிவானந்தஜோதி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவானந்தஜோதி
தந்தை அருளானந்தம்
தாய் தேவி
பிறப்பு 1961.08.06
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானசூரியர், சிவானந்தஜோதி (1961.08.06) மட்டக்களப்பு வந்தாறுமூலையில் பிறந்த எழுத்தாளர், இவரது தந்தை அருளானந்தம்; தாய் தேவகி. ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலும், உயர்கல்வியை கல்முனை வெஸ்லி கல்லூரியிலும் கற்றார். யாழ்ப்பாண பல்கலைக்கழக முதுகலைமாணி பட்டம் பெற்ற இவர் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடத்தப்படும் சைவபுலவர் பரீட்சையிலும் சித்தி பெற்றுள்ளார். சைவ ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் சமயச் சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார். அத்தோடு பல மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார்.

விருதுகள்

சைவச்செம்மல் (பெரியபுராண ஆராய்ச்சி மாநாடு புதுச்சேரி), சர்வதேச மகளிர் தின துறைசார் சாதனையாளர் (ஜனாதிபதி விருது 2011), ”மட்டக்களப்பு நகர சாதனையாளர் 2013” (மட்டக்களப்பு மாநகரசபை), கலைஞர் கௌரவம் (கலைக்கழகம் நடத்திய பத்மஸ்ரீ பாரதிராஜா வழங்கியது 30.09.2017)


குறிப்பு : மேற்படி பதிவு ஞானசூரியர், சிவானந்தஜோதி அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.