ஆளுமை:ஜெயமதி, சந்திரசேகரம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெயமதி
தந்தை கிருஷ்ணபால்
தாய் ஜெயசோதி
பிறப்பு 1973.07.19
ஊர் காரைதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயமதி, சந்திரசேகரம் (1973.07.19) காரைதீவில் பிறந்த பெண் ஆளுமை. இவரது தந்தை கிருஷ்ணபால்; தாய் ஜெயசோதி. ஆரம்பக் கல்வியை காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலயத்திலும், இடைநிலை உயர் கல்வியை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியிலும் கற்றார். இதன் பின்னர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைமாணிப் பட்டத்தை பெற்றார்.

உயர்தரத்தில் இருந்தே எழுத்துத் துறையில் பிரவேசித்துள்ளார். கவிதை, கட்டுரை, சிறுவர் பாடல், வாழ்த்துப்பா, நாட்டார் பாடல் எழுதுதல் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். இவரின் ஆக்கங்கள் பாடசாலை விழா மலர்களிலும் கிழக்கு மாகாண பண்பாட்டு அமைச்சின் நூல்களிலும் வெளிவந்துள்ளன. இவர் விரைவில் கவிதை தொகுப்பொன்றை வெளியிடவுள்ளார்.

விருது

2017ஆம் ஆண்டு சிறந்த கலைஞர் விருது