ஆளுமை:சிவலிங்கம், மயில்வாகனம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவலிங்கம்
தந்தை மயில்வாகனம்
தாய் றோகினிதேவி
பிறப்பு 1961.05.31
ஊர் கோண்டாவில்
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவலிங்கம், மயில்வாகனம் (1961.05.31 - ) யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த ஆசிரியர், எழுத்தாளர். இவரது தந்தை மயில்வாகனம்; தாய் றோகினிதேவி. இவர் ஆரம்பக் கல்வியை யாழ். கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்திலும் இடைநிலை, உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பெற்றார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும் கல்வியியலில் டிப்ளோமாப் பட்டத்தையும் பெற்றுள்ளார். சைவப்புலவர் பட்டம் (2002) பெற்றதுடன் சமாதான நீதவானாகவும் கடமையாற்றுகின்றார்.

இவரது ஆக்கங்கள் ஆற்றல், தினக்குரல், வலம்புரி, உதயன் போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. நாடகம், சொறொழிவுத் துறைகளிலும் பங்களித்துள்ளார். வல்லிபுரநாதர் பாமாலை, காளியம்பாள் கவிமாலை, பர்வதவர்த்தினி பாமாலை, முத்துமாரியம்மன் திருவூஞ்சல் போன்றன இவரது நூல்களாகும். பஞ்ச கலசம் என்ற நூலைத் தொகுத்துள்ளார். வரகவி, கவிஜோதி, ஆசிரியமணி பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 65-66