ஆளுமை:சாரங்கன், வைத்தீஸ்வரன்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சாரங்கன்
தந்தை வைத்தீஸ்வரன்
பிறப்பு 1980.09.09
ஊர் அளவெட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாரங்கன், வைத்தீஸ்வரன் (1980.09.09 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வைத்தீஸ்வரன். யாழ்ப்பாணம், அளவெட்டி, சீனன்கலட்டி ஞானோதய வித்தியாசாலை, யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப்பீடத்தில் கல்வி கற்றுள்ளார்.

இவர் கவிதை, சிறுகதை எழுதி வருகின்றார். இவரது முதலாவது கவிதை இலங்கை வானொலியில் இதய சங்கமம் நிகழ்ச்சியில் திரு. சிதம்பரபிள்ளை சிவகுமாரின் குரலில் 1995 இல் ஒலிபரப்பானது. இவரது கவிதைகள் தினமுரசு, தினக்குரல், தினகரன், வீரகேசரி, மித்திரன், மல்லிகை, நான், நாடி ஆகியவற்றில் வெளியாகியுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 10232 பக்கங்கள் 29-31
  • நூலக எண்: 1778 பக்கங்கள் 07
  • நூலக எண்: 10161 பக்கங்கள் 23
  • நூலக எண்: 10208 பக்கங்கள் 25