ஆளுமை:சாந்தினி, சிவநேசன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சாந்தினி, சிவநேசன்
தந்தை சுப்பையா
பிறப்பு 1952.01.03
ஊர் கொக்குவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாந்தினி, சிவநேசன் (1952.01.03 - ) யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவரது தந்தை சுப்பையா. இவர் ஆரம்பகால நடனப் பயிற்சியைத் தனது தந்தையிடமும் மேலதிகப் பயிற்சியை இந்தியா சென்று அடையாறு பத்மஶ்ரீ கே. லக்‌ஷ்மணன், கே. இராமராவ், நாகமணி ஶ்ரீனிவாசராவ் ஆகியோரிடம் பெற்றுக் கொண்டார். சென்னை பரதசூடாமணியில் பரத டிப்ளோமாப் பட்டமும் திருவனந்தபுரம் விஸ்வகலாஷேத்திரத்தில் கதகளி டிப்ளோமாப் பட்டமும் பெற்றார்.

யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரி, யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் கற்பித்து வந்த இவர், பின்னர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் விரிவுரையாளராகப் பணிபுரிந்து 1997ஆம் ஆண்டு இலங்கைக் கல்வி நிர்வாக சேவை சான்றிதழ் பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர், க.பொ.த. சாதாரண, உயர்தரச் செயன்முறைப் பரீட்சைத் தேர்வாளராகவும் பணியாற்றியுள்ளார்.

தந்தையார் ஏரம்பு சுப்பையாவினால் ஆரம்பிக்கப்பட்ட கலாபவனம் நடனப்பள்ளியைத் தொடர்ந்தும் பேணி நடத்தி வரும் இவரின் கலைச்சேவையைப் பாராட்டி நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை கலைஞானச்சுடர் விருது வழங்கி 2002 ஆம் ஆண்டு கௌரவித்தது. 2005 ஆம் ஆண்டு அதியுயர் ஜனாதிபதி விருதான கலாகீர்த்தி விருதினையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 145
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 227