ஆளுமை:சவாஹிர், கே. எம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சவாஹிர்
பிறப்பு 1931
ஊர் மருதானை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாஹிர், கே. எம் (1931- ) கொழும்பு, மருதானையைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர். இவர் மருதானை சாஹிராக் கல்லூரியில் கல்வி கற்றுள்ளார். இவர் இலங்கையின் முதலாவது திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஆவார். இவர் தோட்டக்காரி, மீனவப் பெண் ஆகிய தமிழ் திரைப்படங்களுக்கும் ஆதரயக்க மஹிய என்ற சிங்களப் படத்துக்கும் இசையமைத்துள்ளார்.

இவர் 1950 ஆம் ஆண்டில் இலங்கை வானொலியில் உருவான இஸ்லாமியக் கீதங்களுக்கு ஆர்மோனியம் வாசித்துள்ளதுடன் முஸ்லிம் சேவையில் இஸ்லாமிய கீதங்கள், தமிழ்ச் சேவையில் மெல்லிசைப் பாடல்கள், சிங்களச் சேவையில் சிங்களப் பாடல்கள் ஆகிய பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 137-140
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சவாஹிர்,_கே._எம்.&oldid=407382" இருந்து மீள்விக்கப்பட்டது