ஆளுமை:கோசலை, மதன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கோசலை
தந்தை மனோகரன்
தாய் கமலகுமாரி
பிறப்பு 1984.09.13
ஊர் யாழ்ப்பாணம்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோசலை, மதன் (1984.09.13) யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் பிறந்த கல்வியியலாளர். இவரது தந்தை மனோகரன்; தாய் கமலகுமாரி. ஆரம்ப பாடசாலை துன்னாலை காசிநாதர் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை பருத்தித்துறை மெதடிஸ்த உயர்தர பாடசாலையிலும் உயர்தரத்தை கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியிலும் கல்வி கற்றார். கொழும்புப் பல்கலைக்கழகததில் சட்டத்துறையில் பட்டம் பெற்றுள்ளார். சட்டத்தரணியான இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை சார்ந்த முழு நேர விரிவுரையாளராக கடமையாற்றுகிறார். சட்டத்துறை சார்ந்த ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார். பெண்கள் உரிமை, சிறுவர் உரிமை, தொழிலாளர் உரிமை, காணி உரிமை தொடர்பான சட்டம் தொடர்பில் வளவாளராக கருத்தரங்குகளில் பங்குபற்றி வருகிறார். பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பிலும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் தொடர்பிலும் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் கட்டுரை நிவேதினி சஞ்சிகையில் தமிழ், ஆங்கிலப் பதிப்புகளில் வெளிவந்துள்ளன. புதிய அரசியல் சீர்திருத்தம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பு:மேற்படி பதிவு கோசலை,மதன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கோசலை,_மதன்&oldid=294843" இருந்து மீள்விக்கப்பட்டது