ஆளுமை:கானமூர்த்தி, கோதண்டபாணி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கானமூர்த்தி
தந்தை கோதண்டபாணி
தாய் இராஜேஸ்வரி
பிறப்பு 1945.01.03
இறப்பு 2008.09.26
ஊர் கோண்டாவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கானமூர்த்தி, கோதண்டபாணி (1945.01.03 - 2008.09.26) யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை கோதண்டபாணி; தாய் இராஜேஸ்வரி. இவர் நாதஸ்வரப் பயிற்சியை தனது மாமன் நாராயணசாமியிடமும் பதின்னான்கு வயதிலும் அதன்பின்னர் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த இராசாவிடமும் கற்றார். தனது இளைய சகோதரன் பஞ்சமூர்த்தியுடன் இணைந்து பல்லாண்டுகளாக இலங்கையில் பல பாகங்களிலும் தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல பாகங்களிலும் நாதஸ்வரக் கச்சேரிகளை நிகழ்த்தினார்.

1989 ஆம் ஆண்டு இலங்கைக் கம்பன் கழகம் யாழ்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் வைத்து கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி இருவருக்கும் வெள்ளிவிழா கொண்டாடியது. இவரதும் கலைஞானத்திற்காக நாதஸ்வர இசைமணி, ஸ்வரநாதஜோதி, நாதகானபூபதி, நாதஸ்வரகானவாரிதி எனப் பல கெளரவங்கள் வழங்கப்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு சர்வதேச இந்துமத குருபீடத்தினால் இசைஞான கலாநிதி என்னும் பட்டமும் வடக்கின் அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் வடக்கு- கிழக்குத் தமிழ் விவகாரங்கள் அமைச்சு, இந்து சமய கலாச்சார அமைச்சு என்பன இணைந்து கலைஞானகேசரி என்னும் பட்டமும் 2006 ஆம் ஆண்டு இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷணம் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 566
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 104


வெளி இணைப்புக்கள்