ஆளுமை:ஐயாத்துரை, வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஐயாத்துரை
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு 1926.02.02
இறப்பு 1996.04.18
ஊர் அல்வையூர்
வகை கவிஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஐயாத்துரை, வேலுப்பிள்ளை (1926.02.02 - 1996.04.18) யாழ்ப்பாணம், வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞன். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலையில் கல்வி பயின்றார். இவர் கவித்திறனும், இசைத்திறனும், நாடகத்திறனும் நிறையப் பெற்றவர். அரியாலை ஶ்ரீ கலைமகள் நாடக சபாவின் இயக்குனராகவும், அரியாலை ஶ்ரீ கலைமகள் சனசமூக நிலைய ஆரம்ப காலச் செயலாளராகவும், சுண்டுக்குளி யாழ்.நாடகக் கலாமன்றத்தின் செயலாளராகவும் கடமையாற்றியதோடு நடிகராகவும் திகழ்ந்தார். இவர் பண்டிதர் மு. வேதநாயகம் அன்பு மாணவராவார்.

யாழ். இலக்கிய வட்டத்தின் மூலம் 1965 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குப் பின்னர் அறிமுகமான இவர், பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்பனவற்றில் தனது கவிதை ஆற்றலை வெளிப்படுத்தியதோடு, கவியரங்குகள் தோறும் கவிதைகளை இசையுடன் பாடிக் கலகலப்படையச் செய்தவர். இதன் காரணமாகக் கன்னல் இசை மழை பொழியும் கவித்துரை எனப் பலராலும் பாராட்டப் பெற்றார். இவர் இலங்கை அரசினால் காந்தி நூற்றாண்டு விழாவையொட்டி 1969 ஆம் ஆண்டு நடாத்தப்பெற்ற கவிதைப் போட்டியில் வெற்றியீட்டியதோடு, அதற்கான பரிசினை முன்னாள் இந்தியப் பிரதமர் நேரு அவர்களின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டிடம் வாங்கிய பெருமைக்குரியவர். இவர் வடமாகன ஐக்கிய மேற்பார்வைச் சங்கம் சர்வதேச கூட்டுறவுத் தினங்களையொட்டி நடாத்திய போட்டிகளில் 3 ஆண்டுகள் தொடர்ந்து பரிசு பெற்றவர்.

இவர் தான் சார்ந்த யாழ்.இலக்கிய வட்டத்தின் வெளியீடாக வெள்ளைக்கமலம், வளர்தெங்கு ஆகிய கவிதை நூல்களை படைத்தார். இசை நாடகங்கள் எழுதுவதிலும் அதனை இயக்குவதிலும், நடிப்பதிலும் வல்லமை மிக்கவரான இக்கவிஞரை அகில இலங்கைக் கம்பன் கழகம் பாராட்டி விருது வழங்கிப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்து மூதறிஞர் என்ற பட்டமும் வழங்கியது. அரியாலை சிறீகலைமகள் சனசமூக நிலையம் இவருக்குக் கலைப்புகழ் விழா எடுத்துக் கௌரவித்து மலரும் வெளியிட்டது. கவித்துறைக்கான இவரது அளப்பெரிய சேவையைப் பாராட்டி யாழ்.இலக்கிய வட்டம் இவர் மறைந்த பின்னரும் ஐயாத்துரையின் கவிதைகள் என்ற நூலை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 18
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 165-168
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 138